கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்
தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் YHWH எனக் குறிக்கப்படுகிறது. யூத வழக்கப்படி இறைவனின் நாமம் உச்சரிக்கப்படலாகாது. நம்மூரில் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக பெயரைச் சொல்லாமல் உறவுமுறையைச் சொல்லி அழைக்கும் வழக்கம் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்ற இடத்தை முன்பு ஆண்டுவந்த எட்டப்ப மகாராஜாவுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக, அவ்வூரில் எண்களின் பெயரையே மாற்றினர் என்பர். 'ஏழு' (7) - க்குப் பிறகு 'எட்டு' (8) என்று சொல்லாமல் 'மகாராஜா' என்று சொல்லி பின்னர் 'ஒன்பது' எண்ணப்பட்டது. இதுபோலவே, அகில பரமண்டலங்களையும் உருவாக்கி ஆண்டுவரும் இறைவனை மதிப்பின் காரணமாக நேரடியாகப் பெயரிட்டு அழைக்காமல் " அடோனை " (பிரபு, ஆண்டவர் அல்லது கர்த்தர்) என்று அழைத்தனர். இதனால்தான் தமிழ் விவிலியங்களில் இறைவனை ஆண்டவர் அல்லது க
கருத்துகள்