பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2
இயேசுவின் திருமுழுக்கு இந்த அத்தியாயத்தில் இயேசுவின் திருமுழுக்கு பற்றி விவிலியத்தில் காணப்படும் விவரங்களை பாப்பரசர் பெனடிக்ட் XVI அலசி ஆராய்கின்றார். இயேசுவின் திருமுழுக்கினை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், இதற்கும் இறைமக்களின் திருமுழுக்கிற்கும் என்ன தொடர்பு என்பதையும் விளக்குகிறார். காலகட்டமும் காலத்தவர்களும் இயேசுவின் திருமுழுக்கு பற்றி மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் எழுதப்பட்டுள்ளது. லூக்கா இந்நிகழ்வு வரலாற்றில் எப்பொழுது நடந்தது என நாம் எளிதாக அநுமானிக்கும்வண்ணம் கால ஆதாரங்களையும் காட்டுகின்றார். லூக்கா 3:1-2 சொல்வதாவது : திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். 2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். ஆகவே இயேசுவின் திருமுழ