இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாசரேத்தூர் இயேசு - 5

இயேசுவின் மூன்றாவது சோதனை மத்தேயு 4:8-11 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். சாத்தான் ஆண்டவரை மலையுச்சிக்குக் கொண்டு சென்று, தன்னை வணங்கினால் உலகின் அரசாட்சியை அவருக்குக் கொடுப்பதாகச் சொன்னான். "மெசியா எனப்படுபவர் உலகம் முழுவதையும் இணைக்கும் ஓர் அரசை உருவாக்கி, சமாதானத்தையும் நல்லாட்சியையும் கொடுப்பவர்தானே? ஆகவே, சாத்தான் வழங்குவதாகச் சொன்ன அரசாட்சியை அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாமே?" எனும் கேள்வி நம் மனத்தில் எழலாம். இதற்கான விடையை இரண்டு இடங்களில் காணமுடியும். முதலாவது : உயிர்த்த ஆண்டவர் சீடர்களை கலிலேயாவிலுள்ள ஒரு மல

நாசரேத்தூர் இயேசு - 4

படம்
(பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் புத்தகத்தை வாசித்தபோது குறித்துக்கொண்ட சில கருத்துக்களின் தமிழாக்கம்) இறைவனைக் குறித்து சிலர் கேட்கலாம் - "ஏன் இறைவன் தான் இரு்ப்பது எல்லோருக்கும் தெரியும்படியாக செய்யவில்லை ? இயேசுக் கிறிஸ்து தான் இருப்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளுமாறு அறிகுறி ஒன்றை விட்டுவிட்டுச் சென்றிருக்கலாமே ?". இது இறைவனையும் மனிதனையும் பற்றிய புரிந்துகொள்ளக் கடினமான ரகசியம். உலகில் இறைவன் நேரடியாக காணமுடியாதவராக இருந்தாலும், மனிதரின் மனம் தேடும்போது கண்டுபிடிக்கத் தக்கவராக இருக்கிறார். இத்தகைய உலகில்தான், போலித் தத்துவங்களால் உருவாகும் மாயையை எதிர்க்கவும், மனிதன் உணவினால் மட்டுமில்லாமல் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிவதாலும் உயிர்வாழ்கிறான் என்பதை உணரவும் நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். இரண்டாவது சோதனை மத்தேயு 4:5-7 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளி

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் YHWH எனக் குறிக்கப்படுகிறது. யூத வழக்கப்படி இறைவனின் நாமம் உச்சரிக்கப்படலாகாது. நம்மூரில் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக பெயரைச் சொல்லாமல் உறவுமுறையைச் சொல்லி அழைக்கும் வழக்கம் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்ற இடத்தை முன்பு ஆண்டுவந்த எட்டப்ப மகாராஜாவுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக, அவ்வூரில் எண்களின் பெயரையே மாற்றினர் என்பர். 'ஏழு' (7) - க்குப் பிறகு 'எட்டு' (8) என்று சொல்லாமல் 'மகாராஜா' என்று சொல்லி பின்னர் 'ஒன்பது' எண்ணப்பட்டது. இதுபோலவே, அகில பரமண்டலங்களையும் உருவாக்கி ஆண்டுவரும் இறைவனை மதிப்பின் காரணமாக நேரடியாகப் பெயரிட்டு அழைக்காமல் " அடோனை " (பிரபு, ஆண்டவர் அல்லது கர்த்தர்) என்று அழைத்தனர். இதனால்தான் தமிழ் விவிலியங்களில் இறைவனை ஆண்டவர் அல்லது க

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3

(பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் புத்தகத்தை வாசித்தபோது குறித்துக்கொண்ட சில கருத்துக்களின் தமிழாக்கம் ) மெசியா அல்லது கிறிஸ்து என்பதன் பொருள் மெசியா அல்லது கிறிஸ்து என்றால் அபிஷேகம் (திருப்பொழிவு) செய்யப்பட்டவர் என்று பொருள். ஏசாயா 11:1,2 சொல்வதாவது:- ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்: அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும் . ஆகவே, திருப்பொழிவு என்றால் ஆண்டவரின் ஆவி ஒருவர் மேல் இறங்கித் தங்குதல் என்று பொருள். இயேசு செபக்கூடத்தில் இதனையே இவ்வாறு குறிப்பிடுகிறார் :- லூக்கா 4:18 18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்' . இய

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

படம்
இயேசுவின் திருமுழுக்கு இந்த அத்தியாயத்தில் இயேசுவின் திருமுழுக்கு பற்றி விவிலியத்தில் காணப்படும் விவரங்களை பாப்பரசர் பெனடிக்ட் XVI அலசி ஆராய்கின்றார். இயேசுவின் திருமுழுக்கினை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், இதற்கும் இறைமக்களின் திருமுழுக்கிற்கும் என்ன தொடர்பு என்பதையும் விளக்குகிறார். காலகட்டமும் காலத்தவர்களும் இயேசுவின் திருமுழுக்கு பற்றி மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் எழுதப்பட்டுள்ளது. லூக்கா இந்நிகழ்வு வரலாற்றில் எப்பொழுது நடந்தது என நாம் எளிதாக அநுமானிக்கும்வண்ணம் கால ஆதாரங்களையும் காட்டுகின்றார். லூக்கா 3:1-2 சொல்வதாவது : திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். 2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். ஆகவே இயேசுவின் திருமுழ

நாசரேத்தூர் இயேசு - பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 1

பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் எழுதிய " நாசரேத்தூர் இயேசு " என்ற புத்தகத்தை சமீபத்திலே வாசித்தேன். ஒருவிதமான விசுவாசத்தைப் பற்றிய தளர்ச்சியிலும், சுய முரண்பாட்டிலும் குழப்பத்திலும் சிக்கித்தவிக்கும் கத்தோலிக்க மனங்களுக்கு இப்புத்தகம் அருமருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. விவிலிய வசனங்களுக்கு நாத்திகப் பாணியில் விளக்கம் கொடுத்து ஊரை எமாற்றும் சில இறையியல் வல்லுனர்களை அடையாளம் காணவும் இப்புத்தகம் நிச்சயமாக உதவும் . இனி, இந்த புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தில் பாப்பரசர் என்ன சொல்கிறார் என பார்ப்போம். பழைய ஏற்பாட்டின் இணைச் சட்ட ஆகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் உறுதிமொழிக்கும் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை சுட்டிக் காட்டுகிறார். இணைச் சட்டம் 18:15 வசனத்தில் சொல்லப்பத்திருப்பது உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஒரு இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஆகவே வாக்களிக்கப்பட்டவர் ஒரு புதிய தாவீது (இஸ்ரயேலின் அரசர்) அல்லர்; மாறாக அவர் ஒரு புதிய மோசே (இறைவாக்கினர்). இறைவாக்கினர் என்பவர் யார் ? வர