இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வது தவறு என்று பிரதமர் மோடி கூறிய சில மணி நேரங்களில், ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிமை கொடுமையாகத் தாக்கிக் கொன்றுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில்  42 வயது ஆன அலிமுத்தீன் இல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு தீவிரவாதிகளால் தாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களில், பசுப் பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு கொலை செய்பவர்கள், வேறு காரணங்களுக்காக கூலிக்குக் கொலை செய்பவர்களாகவும் இருக்கக் கூடும். ஆனால், பசு பக்தர்கள் என்று ஒரு கூட்டம் வன்முறையை நியாயப் படுத்திக் கொண்டிருக்கும் வரை, அதனை சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

படம்
நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

நலம் தரும் மூலிகைகள் : 2

நலம் தரும் மூலிகைகள் : 2 ஆறுமணிப்பூ எண்ணெய் மற்றும் ஃபிவர்ஃபியூ ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம். 3) ஆறுமணிப்பூ எண்ணெய் (Evening Primrose Oil) ஆறுமணிப்பூ என்பது மாலையில் மலரும் மலைப்பூ வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காம்மா லினெலோனிக் அமிலத்தைக் (Gamma Linelonic Acid) கொண்டுள்ளது. இவ்வமிலம் ஒமேகா-6 கொழுப்பின் ஒரு வகையாகும். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பினை குறைக்க இயலும். மேலும் இதனால் மூளையின் ஆற்றல் மற்றும் ஒருமித்த கவனம் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும் என் கருதப்படுகிறது. 4) ஃபிவர்ஃபியூ (Feverfew) ஃபிவர்ஃபியூ (Feverfew) என்பது ஐரோப்பாவில் வளரும் சிறிய பூ வகையாகும். இதன் பூக்களும் இலைகளும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. இச்செடியின் புதிய இலைகளை எடுத்து உண்பதால் ஒற்றைத் தலைவலியை குறைக்க முடியும்.

நலம் தரும் மூலிகைகள் : 1

நலம் தரும் மூலிகைகள் : 1 மூலிகை மருத்துவம் தொன்றுதொட்டு நம் இந்திய நாட்டிலும் உலகில் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. தீக்காயம், வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, தூக்கமின்மை முதலான பல நோய்களையும் தீர்க்க பயன்பட்டு வருகிறது. இந்த தொடரில், நம் உடல்நலனுக்கு உபயோகமாகும் சில மூலிகைகளைப் பற்றி பார்க்கலாம். 1) புதினா புதினா மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகை. புதினா இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ-யை குடிப்பதால் வலி, வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இம்மூலிகையால் மாதவிடாய் வலி நிவாரணமும் பெற முடியும். புதினா செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு ஆவிபிடிப்பதால் இழுப்பு, ஆஸ்த்மா, லாரிஞ்சைட்டிஸ் போன்ற நோய் உடையவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்யலாம். மேலும் இது இரத்தத்திலிருந்து சிறுநீரைப் பிரிக்கவும் (diuretic) உதவுகிறது. 2) எகினெசியா (ECHINACEA) எகினெசியா அல்லது ஊதா நிற டெய்சி பூ என்று அழைக்கப்படும் இம்மூலிகை அமெரிக்காவில் அதிகமாக வளர்கிறது. இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களைக்

பழக்கத்தை மாற்றுவோம் - இதயத்தைக் காப்பாற்றுவோம்

படம்
பொதுவாக சிகரெட் பிடிப்பது, உடல் பருமனாயிருப்பது போன்றவை இதயத்தின் நலனுக்கு நல்லதில்லை என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இவை தவிர இன்னும் சில பழக்கங்கள் இதயத்தை அதிகமாக பாதிக்கலாம் என்பது தெரியுமா ? அவை பற்றி இங்கு பார்ப்போம். பழக்கத்தை மாற்றுவோம்- இதயத்தைக் காப்பாற்றுவோம் ஒழுங்கான தூக்கமில்லையா ?  தொடர்ந்து தூக்கமில்லாமல் இருப்பதால் உடலுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இதயத்தைச் சேதப்படுத்தும் ஹார்மோன்கள் உற்பத்தியாகி மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. 2011 -ல் பிரிட்டனில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி தினமும் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 6-லிருந்து 8 மணி நேரம் வரை தூங்குபவர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என அறியப்பட்டது. ஒரு இரவில் 7 மணிநேரம் தூங்குவது மிகவும் ஏற்றதாகும். நாம் பல மணிநேரம் படுக்கையில் தூங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் குறட்டை மற்றும் உறக்க மூச்சிடைநிற்பு ( sleep apnea ) போன்றவற்றால் தேவையான அளவுக்கு தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் அடுத்த நாள் காலையில் ம

முதுகுவலியைத் தடுக்கும் பழக்கவழக்கங்கள்

படம்
முதுகுவலி எதனால் வருகிறது என்று கண்டுபிடிப்பது கடினமானதுதான். என்றாலும், அதை தடுப்பதற்கும், வலியைக் குறைப்பதற்குமான வழிமுறைகள் பல உள்ளன.  அன்றாட சில பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் ஆரோக்கியமான, முதுகுவலியில்லாத உடலை நெடுநாள் கொண்டிருக்க இயலும். முதுகுவலியைத் தடுக்கும் பழக்கவழக்கங்கள் 1.முழங்காலின் அடியில் ஒரு தலையணையை வைத்துத் தூங்குதல் முதுகு படுக்கையை தொடுமாறு நேராக தூங்குவதால் முதுகுத்தண்டின்மேல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கால்களை லேசாக உயர்த்திக்கொண்டு தூங்கும் போது இந்த அழுத்தம் குறைகிறது. முழங்காலின் அடியில் தலையணையை வைத்துத் தூங்கும்பொழுது, முதுகின்மீதான அழுத்தம் பாதியாகக் குறைக்கப்படுகிறது. 2. முக்கிய தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி உடற்பயிற்சியினால்  உடல்நலத்திற்கு ஏற்படும் நன்மைகள் நாம் அறிந்ததே. முக்கிய தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை, குறிப்பாக முதுகு மற்றும் வயிற்றுப்பகுதியை பலப்படுத்தும் பயிற்சிகளை வாரத்தில் இரண்டு நாட்களாவது செய்துவருவதால், சுளுக்கு மற்றும் தசைபிடிப்பு போன்றவற்றை குறைக்கலாம். 3. கால்சியம், விட்டமின் – D அடங்கிய உணவுகளை உட